Posts

Showing posts from July, 2020

தலைவலி-ஜலதோஷம் (சளி) கபம் குறைய சில நிவாரணங்கள் பாகம் 2

Image
நிவாரணம் பாகம்-2 6.திப்பிலி ஒரு பங்கு மற்றும் துளசி இலை மூன்று பங்கு என்ற அளவில் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட சளி அகலும். 7. தும்பை பூ உடன் மிளகு சேர்த்து தூளாக்கி காலை மாலை எனில் நாட்கள் சாப்பிட சளி அகலும். 8. சூடான சுக்கு மல்லி காபியில் சிறிது தேன் கலந்து குடிக்க சளி கரையும். 9. இஞ்சிச்சாறு 50 கிராம், நல்லெண்ணெய் 50 கிராம் எடுத்துக்கொண்டு சேர்த்து காய்ச்சி டப்பாவில் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.இந்தத் தைலத்தை நன்றாக தேய்த்து வெந்நீரில் குளித்தால்  தலைவலி குணமாகும். 10.முள்ளங்கி சாறு அல்லது மாதுளை பழம் சாப்பிட தலைவலி மற்றும் ஜலதோஷம் நீங்கும்.

தலைவலி-ஜலதோஷம், கபம் கரைய....... சில வழிமுறைகள்.

Image
நிவாரணம் பாகம்-1. 1. செலவின்றி தினமும் காலையில் வெறும் வயிற்றுடன், பல் துலக்கிய உடன் வாயைச் சுத்தம் செய்யும்பது முதுகை நன்றாக வளைத்து, அவ்வாறு செய்யும்போது உணவுக்குழல் வழியாக உள்ளே விட்டு நீர் முதலில் வெளியேறும். இந்த பித்த நீர் வெளியேற்றும் பல நோய்கள் உருவாகுவதை தவிர்க்கவும். 2. நாட்டு வெங்காயம் 2, மூன்று மட்டும் பச்சையாகவே குறித்து சாப்பிட்டாலும் அல்லது கொண்டகடலை லேசாக வறுத்து மென்று சாப்பிட்டு வர தலைவலி, தலைபாரம், இருமல், தீரும். 3. பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டுவர மழை மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் மற்றும் தலைவலி தீரும். 4. துளசி இலையை அரைத்து விழுதை நெற்றியில் பற்றுப் போட தலைவலி குணமாகும். 5. துளசி இலை சாறு, வில்வ இலை சாறு வகைக்கு 100 மில்லி எடுத்து, அத்துடன் 200 மில்லி தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, சாறு சுண்டிய பின் இறக்கி வடிகட்டி தினசரி தலைக்கு தேய்த்துவர அனைவரும் தலை வலி தொல்லை தீரும்.