பற்களை பாதுகாக்க சில வழிமுறைகள்...... பாகம் 2.
நிவாரணம் பாகம்-2 6. வன்னிக் காயை தண்ணீரில் கொதிக்கவைத்து வெது, வெதுப்பாக இருக்கும் போது வாய் கொப்பளிக்க பல் ஈறுகள் வீக்கம் மற்றும் வலி நீங்கும். நாக்கு மற்றும் வாய்ப்புண் ஆறும். 7.வாகை வேர்ப்பட்டையை நீர் விட்டுக் காய்ச்சி வெது ,வெதுப்பாக இருக்கும் போது அதனைக் கொண்டு வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும் . பல் ஈறு உறுதியாகும். 8. பப்பாளிப் பழத்தை தொடர்ந்து 4, 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல் கூச்சம் நீங்கி விடும். சர்க்கரை சத்து சேர்ந்து விடும் என்று பயம் வேண்டாம். 9. வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும். மேற்கண்ட ஏதேனும் ஒரு வழிமுறையை பயன்படுத்தி பயன் பெறுவீர். நன்றி.