Posts

Showing posts from June, 2020

பற்களை பாதுகாக்க சில வழிமுறைகள்...... பாகம் 2.

Image
நிவாரணம் பாகம்-2 6. வன்னிக் காயை தண்ணீரில் கொதிக்கவைத்து வெது, வெதுப்பாக இருக்கும் போது வாய் கொப்பளிக்க பல் ஈறுகள் வீக்கம் மற்றும் வலி நீங்கும். நாக்கு மற்றும் வாய்ப்புண் ஆறும். 7.வாகை வேர்ப்பட்டையை நீர் விட்டுக் காய்ச்சி வெது ,வெதுப்பாக இருக்கும் போது அதனைக் கொண்டு வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும் . பல் ஈறு உறுதியாகும். 8. பப்பாளிப் பழத்தை தொடர்ந்து 4, 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல் கூச்சம் நீங்கி விடும். சர்க்கரை சத்து சேர்ந்து விடும் என்று பயம் வேண்டாம். 9. வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும். மேற்கண்ட ஏதேனும் ஒரு வழிமுறையை பயன்படுத்தி பயன் பெறுவீர். நன்றி.

பற்களை பாதுகாக்க சில எளிய வழிமுறைகள்.

Image
நிவாரணம் பாகம் 1 1. இனிப்பு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பல் சொத்தை ஏற்படும். எனவே எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளித்து பற்களை சுத்தம் செய்ய வேண்டும். 2. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பதும், குளிர்ந்த நீரை குடிப்பது கூடாது. 3.பப்பாளி செடியின் பாலை அல்லது எருக்கம் பாலை தொட்டு வலியுள்ள பல் மீது தடவி வர பல்வலி தீரும். 4. ஆலம் மொட்டை அல்லது பாகற்காய் இலையில் அல்லது நந்தியாவட்டை வேரை எடுத்து வந்து அடிக்கடி பல்லினால் நன்றாக மென்று அடக்கி வைத்து பிறகு துப்பி விட பல் வலி நீங்கும். 5. அத்தி மரத்தின் இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வெது, வெதுப்பாக இருக்கும் போது வாய் கொப்பளிக்க வாய்ப்புண், பல் ஈறுகளில் சீழ் பிடித்தல் போன்ற நோய்கள் குணமாகும்.

வாய்ப்புண் பிரச்சினையா? கண்டிப்பாக இதை படிக்கவும்... பாகம் 2

Image
வாய்ப்புண்ணிற்கு நிவாரணம் பாகம் 2 5. ஆலம் விழுதில் உள்ள முளைகளை கடித்து மென்று சாப்பிட வாய்ப்புண் ஆறும். 6. முல்லைப்பூ இலையை வாயிலிட்டு மென்று சாப்பிட வாய்ப்புண் குணமாகும். 7. பிஞ்சுக் கடுக்காயை வாயில் ஒதுக்கிக் கொண்டு சிறிது சிறிதாக உமிழ் நீரை விழுங்கி வர வாய்ப்புண் ஆறுவதுடன் மலச்சிக்கல் அகலும். 8. வன்னி காயை அல்லது அத்தி மர இலையை தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்க வாய்ப்புண், நாக்கு வீக்கம் மற்றும் வலி அகலும். மேற்கண்ட நிவாரண ங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி பயன் பெறுவீர், இன்னும் பல நலம் தரும் மருத்துவத்துடன் தங்களைச் சந்திக்கிறேன், நன்றி.

வாய்புண் பிரச்சினையா? கண்டிப்பாக இதை படியுங்கள் பயன் பெறுவீர்…!

Image
     வாய்ப்புண் நிவாரணம் பாகம் 1. 1.வேப்பிலையை காயப்போட்டு தூள் செய்து விட்டு தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் மாறும். 2. தேங்காய்ப் பாலில் மாசிக்காய் அரைத்து உட்கொண்டு வந்தால் வாய்ப்புண், தொண்டை புண் குணமாகும். 3. அகத்திக் கீரையை உண்டு வர வாய்ப் புண் வராது, ரத்தக் கொதிப்பு கட்டுப்படும். 4.அத்தி கொழுந்தை அதிகாலையில் ஒரு பிடி மென்று தின்றால் வாய்ப்புண் ஆறும். மேலே குறிப்பிட்ட நிவாரணங்கள் ஏதேனும் ஒன்றை பின்பற்றினால் பயன் பெறுவீர். மேலும் பல நிவாரணங்கள் உடன் தங்களைச் சந்திக்கிறேன். நன்றி

முகப்பருக்கள் மறைய வேண்டுமா? அப்ப கண்டிப்பாக நீங்கள் இதை பார்க்க வேண்டும்.

Image
முகப்பருவுக்கு நிவாரணம்   பாகம்-2 6.அருகம்புல் சாற்றுடன் சிறிதளவு பன்னீர் , பப்பாளி பழம் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி, உலகத்தடன் கழுவிவர வெயிலால் ஏற்பட்ட கருமை அகன்று முகம் பளபளப்பாகும் மேற் கூறிய  கலவை அரைத்து வடிகட்டி பருகி வர சிறுநீரக நோய்கள் குணமாவதுடன் ,உடலும் முகமும் அழகு பெறும். 7.ஊமத்தம் பூவை கசக்கி பருக்களின் மீது பற்றுப் போடலாம் .எலுமிச்சம் இலையை மட்டும் அரைத்து பூசலாம். 8.ஜாதிக்காய் ,சந்தனம் மிளகு இ,மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசினால் பரு தொல்லை போகும் சிலர் வெள்ளைப்பூண்டை மட்டும் அரைத்துப் பூசுவார்கள். 9.  தேன் மெழுகையும்,சர்க்கரையும் சேர்த்து குழைத்து அதை முகப்பருக்கள் மீது இட்டு வர விரைவில் அவை மறைந்துவிடும். முகம் பொலிவு பெறும் 10. வாரம் ஒன்றிரண்டு நாட்கள் அகத்திக் கீரையை உணவில் சேர்த்து வந்தாலும், தினசரி ஒரு துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டாலும் முகம் வசீகரன் அடைந்து, பருப்பில் நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். 11. துளசி 4 இலை, வேப்பம் தளிர், கடலை மாவு ஒரு தேக்கரண்டி, எலுமிச்சைச்சாறு அரை தேக்கரண்டி கலந்து அரைத்துக் கொள்ளுங்...

முகப்பரு அல்லது பிம்பிள்ஸ் பிரச்சினையா? கவலைப்படாதீர்கள் ...இதைப் படியுங்கள் பயன் பெறுவீர்!

Image
முகப்பருவுக்கு நிவாரணம்   பாகம்-1 1.முதலில் முகத்தில் இருக்கின்ற செபாஷியஸ் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் "சீபம்" என்னும் எண்ணெய்க் கசிவு முகத்தோலின் மீது படிவதால், பலவிதமான ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு அவை முகப்பருவாக மாறுகிறது. நவநாகரீக உணவான ட்ரை புட்ஸ்களை தவிர்க்க வேண்டும். 2. முகப்பரு இருந்தால் உடனே கிள்ளி எறிந்து விட விரல்கள் முயற்சிக்கும். கிள்ளினால் பெரும் விளைவுகள் உண்டாகும். முதலில் புதினா புதினா இலைகளை அரைத்து தடவுங்கள். 3. வேப்பிலை பொடியுடன் மஞ்சள் தூள், சந்தனம் சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்களில் மீது பூசி வரலாம். 4. வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசிப் பொடி, இவைகளை தலா 10 கிராம் அளவு எடுத்துக் கொண்டு மிதமான சுடுதண்ணீரில் மேற்கொண்ட பொடிகளை சந்தனம் போல் குழைத்து முகத்தில் தடவவும். கண்களுக்கு அடியில் கண்டிப்பாக தடவக் கூடாது. 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடவும். தொடர்ந்து 4 அல்லது 5 நாட்கள்  செய்தால் பருக்கள் மறையும். 5. அருகம்புல் பொடி, குப்பை மேனி இரண்டையும் சம அளவு பருக்களின் மேல் மருந்து போல் இரவில் போட்டு, காலை அலம்புங்கள். த...

Tips to wake up early in the morning

Image
Many of peoples can't wake up early because of their laziness,stress,late night sleep etc,.. Here we going to see a simple solutions to wake up early.... 1. Go to Bed soon as possible                             Every human being need atleast 8hours rest to boost up their body...So eat early and sleep early to wake early. 2.Say to your mind                             The body obey the command of our brain....So before sleep think about what should do in morning....say to yourself that you should wake early.. this technique is scientifically proven 3.Avoid over-eating at night                            If u eat more...than your stomach take more time for digestion..so it leads sleepless night..So eat limit at night The above solutions are some of the ways to wake up early..so sub...